Thursday 27 October 2016

நீளும் மதிகெட்ட மனசு

கண்கள் நிறைய கானல் நீர் போல காட்சிகள்...
எதுவும் தெளிவாய் புலப்படவில்லை!
ஆனால் மனம் ஏனோ..!! - மன்னராகி மகுடம் சூடி,
எதிரியிடம் மண்டியிடும் காட்சிவரை
காட்டாறு போல கடந்துசென்று,
செட்டியார் கடையில் (செட்டியார் )யோவ் உன்னதாம்பா...
என்று கூச்சலிட்டு கூப்பிடும்வரை - நீள்கிறது இந்த மதிகெட்ட மனசு!!!